
Winner N Thiyagarajan
- வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..
(உன்னைக்)
சித்திரப்
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன்ன வேண்டுமடா...
(உன்னைக்)
(மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடல் பகுதிக்கு இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்.)
N Thiyagarajan எழுதிய வரிகள்:
பாசாங்கு சொல்லி புரிவாயே ஜாடை
பால்மணம் மாறா பிள்ளை உன் வாடை
பாவையின் நெஞ்சில் ஆடிடும் மேடை
பிஞ்சு முகம் பார்க்க வந்தாடும் இன்பம்
பலகோடி ஆகுமடா
பலகோடி ஆகுமடா
(உன்னைக்)