icon

Winner கி.சத்தியன்.

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா

தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா


தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா


தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா

தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா


தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா


கி.சத்தியன். எழுதிய வரிகள்:

பல்லவி
சுடுகாடு தான் சுகவீடுதான்
கடுகாகநான் சிறுஆளாகினேன்
தெருக்கோடிதான் எனதாட்சிதான்
கறிக்காகநான் விலைஆடாகினேன்
( சுடுகாடு..)
சரணம்

வானில்லா நிலவாக்கியேன்
விடியாதுபாழ் கனவாக்கினாய்
மீனில்லா புனலாக்கியேன்
முடமானவீண் நினவாகினாய்
நாணில்லா தனுசாக்கியேன்
நகையாடிகூன் உடலாக்கினாய்
தூணில்லா குடிலாக்கியேன்
தளர்வேற்றிவீழ் மரமாக்கினாய்
( சுடுகாடு...)

வீதிமேல் இரைத்தாயம்மா
விதைபோலநான் முளைத்தேனம்மா
(அ) நாதியாய் சபித்தாயம்மா
அதில் கோழைநான் திளைத்தேனம்மா
ஜாதியால் பிரித்தாயம்மா
சிதையாய்நான் சிதைந்தேனம்மா
ஏதுயான் இழைத்தேனம்மா
பிழைகூறுவாய் தயைகூர்ந்தம்மா
( சுடுகாடு..)



வெற்றியாளர் கி.சத்தியன். என்ன கூறுகிறார்

வணக்கம். 


சிறுவயதில் இருந்தே தமிழின்பால் அதீத ஈடுபாடு எனக்கு உண்டு. கவிதை புனைவது எனக்கு  பிடிக்கும். கற்பனைக் குதிரையை அவ்வபோது அவிழ்த்து விடுவேன். நிறைய கவிதைகள் குப்பைக்காகிதமாக்கி கொண்டேன்


படிக்கிற காலம் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளேன். ஆனாலும் ஆதங்கம். ஏக்கம். 


ஒருமுறை முகநூல் பக்கங்களில் சுற்றிஅலைந்தேன். என் கண்களில் பளிச்சிட்டது ஒரு சரணம் இணையதளம் மின்னலென விழித்தேன். எனக்கு பிடித்தமான அந்த தளத்தையே சுற்றி சுற்றி வந்தேன் அருமையான கவிதை பிறந்தது சந்தக்கவிதைகள் இயல்பாகவே எனக்கு வரும். எளிமையான என் கவி நடைக்கு ஏற்றாற்போல் உள்ள சந்தக்கவிதை

ஒரு சரணம் இணையதளத்திற்கு அனுப்பினேன். என் கவிதைக்கு முதல் பரிசு என என் காதுகளுக்கு எட்டியதும்  நான் பெற்ற மகிழ்ச்சி அபரிமிதமானது


இத்தளத்தை உருவாக்கி என் போன்றோருக்கு வழிகாட்டும் உன்னத இந்த குழுமத்திற்கு என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். மீண்டும் நன்றிகள் பல.