icon

Winner BOOMINATHAN M

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து

உறவாடும் நேரமடா...

உறவாடும் நேரமடா...


கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா..

வளர்ந்தாலே போதுமடா..

(உன்னைக்)


சித்திரப்  பூபோலே சிதறும் மத்தாப்பு

தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறேன்ன வேண்டுமடா...

வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்)


(மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடல் பகுதிக்கு இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்.)

BOOMINATHAN M எழுதிய வரிகள்:

இருள்நீக்கி ஒளிபொங்கும் திருநாளைப்போலே....
உன் வாழ்வில் எல்லோர்க்கும் ஒளிசேர்க்க வேண்டும்....
இறைவனின் படைப்பில் எல்லாம் புதுமை..
மகிழ்வாய்....பகிர்வாய்.......அதில்தானே இனிமை....
அழகான வாழ்வில் உலகோடு சேர்ந்து
மகிழ்ந்தாட வேண்டும்டா....
மகிழ்ந்தாட வேண்டுமடா......




மு.தை.பூமி