
Winner சையத் அமீருல்லாஹ் சை.மு.
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா
தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா
தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
சையத் அமீருல்லாஹ் சை.மு. எழுதிய வரிகள்:
கனவானதே கனமானதே பரிவானதோ பிரிவாகாததே
தேய்கிறேன் உயிர்ப்பாதியோ எனைநீங்கியே உடல்வாழ்கிறேன்!
மாய்கிறேன் கடும்வாடையே குளிர்கூடியே குயில்வீழ்கிறேன்!
தீய்கிறேன் இடிதாங்கியே உயர்ஆலமும் அலைந்தாகிறேன்!
தேய்கிறேன் நறுஞ்சாந்தமோ புகையாகவே வெளிசேர்கிறேன்!
அகலாததே அகமானதே நிகரானதோ நிகழாதானதோ
கனவானதே கனமானதே பரிவானதோ பிரிவாகாததோ
சாய்கிறேன் நெடுமாடமோ மெதுவாகவே சிதைந்தாகிறேன்!
ஓய்கிறேன் வலிகூடியே தகிநெஞ்சிலே நினைவேந்தியே!
காய்கிறேன் உவர்நீரிலே இனிமைநிறை முகம்தோன்றுதே!
வீகிறேன் கவியாகியே வெறுந்தாள்களே எனைஏந்துதே!